கான்கிரீட்டில் அரிப்பா கவலையை விடுங்க...


கான்கிரீட்டில் விரிசல் என்பது போலவே அரிப்பு என்பதும் பெரும் தொல்லை. ஆனால் அதற்கு தற்போது  ஜென்ட்ரிஃபிக்ஸ் என்னும் வேதியியல் தயாரிப்பு வந்துவிட்டது.கான்கிரீட்டை வலுவிழக்கச் செய்வதில் தீவிரமாகச் செயல்
படுவது அரிப்பு. வேதிப்பொருட்களால் ஏற்படும் துரு, அரிப்பு, வலுவிழப்பு ஆகிய தொல்லைகளை அறவே ஒழிப்பதற்கு ஜென்ட்ரிஃபிக்ஸ் வந்துவிட்டது.

இது தாது அடிப்படையிலான ஒரு சேர்மானப் பொருள். அரிப்பைத் தடுக்கவும், தவிர்க்கவும் இதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பழைய கட்டுமானங்களைப் பழுதுபார்க்கும் தேவைகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனை வேறு எந்தவிதக் கரைப்பான்களுடனும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டியது இல்லை.

எப்படிச் செயல்படுத்துவது?

ஜென்ட்ரிஃபிக்ஸ் கொண்டு அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு செய்து விட்டீர்கள் என்போம்.  பாதுகாப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியை முதலில் ஈரமாக்க வேண்டும். ஈரமாக  இருக்க வேண்டும் என்றுதான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது.
ஜென்ட்ரிஃபிக்ஸை அப்படியே தண்ணீருடன் கலந்து பயன்படுத்த வேண்டியதுதான். தண்ணீருடன் கலக்கும் வேலையைச் செய்யும் நேரத்தில் தொடர்ச்சியாகக் கலக்கிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சீரான கூழ் போன்ற பக்குவத்தில் தயாரிக்க வேண்டும். கட்டிகள்  தேங்கக் கூடாது. கரைப்பு வேலையைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.இது ஐந்து நிமிடத்திற்குள் முடிந்து விடக் கூடிய வேலைதான். அலட்சியம் காட்டாமல் மேற்கொள்ள வேண்டும். மெதுவாகச் சுழன்று கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரங்களையும் இதற்குப் பயன்படுத்தலாம்.

என்ன விகிதத்தில் கலப்பது?

கலக்கப்படும் கலவை எந்த அளவு பக்குவத்தில் அமைய வேண்டும் என்பதற்கேற்ப பொறுமையாகக் கலக்கிக் கொண்டு வர வேண்டும். அதிகமாக நீர்த்துப் போகவும் விடக் கூடாது. ரொம்பவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பரப்புவது எப்படி?

பெயின்ட் அடிப்பதைப் போல் அடிக்க வேண்டியதுதான். இதற்குப் பொருத்தமான பிரஷை எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்புக் கம்பிகளின் மேல் அவற்றின் உடற்பகுதியை நன்கு மூடும்படி கலவையைப் பூச வேண்டும். இவ்வாறு இரண்டு கோட் அடிப்பது அவசியம். கம்பிகள் குறுக்கும் நெடுக்கமாக அடுக்கப்பட்டுக் கட்டுக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருப்பது வழக்கம். கலவையைக் கம்பிகளின் மேல் பூசும்போது இந்தக் கட்டுக் கம்பிகளின் மேலும் கலவை பூசப்படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இது அரிப்பை அண்டவிடாமல் செய்வதற்கான கவசத்தை அணிவிப்பது போன்ற வேலை. தவிரவும், இணைப்புகளை மேலும்
உறுதியாக்கவும் உதவும். இந்தத் தேவைகளுக்காகவே ஜென்ட்ரிஃபிக்ஸ் பூசப்படுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு வேலைகளைச் செய்ய வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் பிரஷ்கள் விசயத்திலும் கவனமாக இருங்கள். குச்சங்கள் குட்டையானவையாக அமைக்கப்பட் டிருக்கும் பிரஷ்களையே பயன்படுத்துங்கள்.முதலில் ஒரு கோட் அடித்து முடித்த பிறகு இரண்டாவதாக இன்னொரு கோட் அடியுங்கள். முதல் கோட் பாதுகாப்பதற்கு. இரண்டாவது கோட் பழுதுபார்க்கும் வேலைகளுக்காக.
ஜெர்மானிய தொழிற்நுட்ப ஒத்துழைப்போடு ஜென்ட்ரி ஃபிக்ஸை மெக் பாக்கெமி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து அளிக்கிறது.

கான்கிரீட் தரைகளை காக்கும் ரெட்ரோ பிளேட்-REDRO PLATE


கான்கிரீட் தரைகள் நீண்ட காலம் பயன்படுத்தப்பட வேண்டுமா?
ஏற்கனவே போடப்பட்ட கான்கிரீட் தரையை மாற்றி  அமைக்க வேண்டிய தேவை வரக்கூடாதா?அடிக்கடி கான்கிரீட் தரையைப் பராமரிப்பு வேலைகளுக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறதா?
ஒரே மாதிரியான கான்கிரீட் தரையை நீண்ட காலம் பார்த்துக் கொண்டிருப்பதால் சலிப்பு ஏற்படுகிறதா?
உங்கள் அத்தனை சிக்கல்களையும் தீர்க்க வந்துவிட்டது ரெட்ரோ பிளேட் 99.  இது என்ன என்று புரியவில்லையா? புதிய கான்கிரீட் தரையாக இருந்தாலும் சரி..பழைய கான்கிரீட் தரை என்றாலும் சரி. ரெட்ரோ பிளேட் 99, பளபளப்பான கான்கிரீட் பரப்பை உருவாக்கிக் கொடுக்கும். நீங்கள் இதுகாறும் அனுபவித்து வந்த தொல்லைகள் எதுவும் இருக்காது.

எப்படி வேலை செய்கிறது?

ரெட்ரோ பிளேட் 99இல் இடம்பெற்றுள்ள வேதிப் பொருட்கள் ஈரத்தன்மையை நீண்ட காலம் நிலைநிறுத்துகின்றன. இதனால் கான்கிரீட் கலவையைக் குலுக்கிவிடுவதற்கான தேவை குறையும். கான்கிரீட் பரப்பில் ஈரம் நிலைநிறுத்தப்படுவதால் கட்டுமானக் கலவை நன்றாக உள்ளிழுக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
ஆவியாவதால் ஏற்படும் இழப்பு குறைக்கப்படுகிறது. தரைப்பரப்பு எந்த அளவுக்கு பளபளப்புக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கேற்ற வகையில் தேய்த்துப் பளபளப்பாக்கும் உத்திகளைப் பின்பற்றலாம்.தரையின் தேய்
மானத்தைக் கட்டுப்படுத்தலாம். உராய்வுகளால் ஏற்படும் சேதத்தை எதிர்க்கும் திறனை நான்கு மடங்கு வரை அதிகப்படுத்தலாம். தரையின் மீது படும் ஒளியைத் திருப்பிப் பிரதிபலிக்கும் திறன் 30 விழுக்காடு வரை கூடுதலாகும். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான விளக்குகளை எரித்தாலும் நல்ல வெளிச்சம் கிடைக்கும். மின்சாரத் தேவை குறையும். கட்டணத்தில் சிக்கனம் ஏற்படும்.

பழைய தரைகளைப் புத்தம் புதியதைப் போல் மாற்றி  அமைக்கலாம். குறைந்தபட்சப் பராமரிப்பே போதுமானதாக இருக்கும். தரையின் மீது கனமானபொருட்களை இழுத்துச் செல்வதால் ஏற்படும் கீறல்கள் தோற்றத்தின் அழகைக் கெடுக்காத வகையில் தவிர்க்கப்படும். கறைகள் படிவதும் மட்டுப்படுத்தப்படும். இதனால் தரைகள் எப்போதும் பளிச்சென்று சுத்தமாகவே வைத்துக் கொள்ளப்படும். நீண்ட கால உழைப்பையும் உறுதி செய்யலாம். குறைந்த செலவில் பயன்படுத்தலாம்.

விற்கப்படும் நிலையில் வாங்கி வருவதை வேறு வகைகளில் நீர்ப்பதற்கும் அவசியம் இல்லை. அப்படியே தயார் நிலையில் பயன்படுத்தக் கூடிய விதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தரையின் உறுதியை இறுக்கம் மிகுந்ததாக ஆக்குகிறது.
கண்ணுக்குத் தெரியாமல் ஆவியாகிக் காற்றில் கலக்கும் நச்சுப் பொருள் வகை எதுவும் ரெட்ரோபிளேட்டில் கிடையாது. இதனால் உடல் நலத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. பதினைந்து வருட காலத்திற்கு உத்தரவாதமும் தருகிறார்கள்.
பசுமைக் கட்டுமான விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. எனவே பசுமைக் கட்டுமான தரச்சான்று பெறுவதில் தடை இருக்காது.

ஜெர்மன் தொழிற்நுட்பம் - GERMAN TECHNOLOGY


மேற்கு ஜெர்மனியில் ஸ்டீன்நாக் என்ற நகரில் 1964 ஆம் ஆண்டு பாஸ்சல் என்ற நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள உத்திகளை உலகம் முழுவதும் கட்டுமானத் துறையில் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.இப்போது இந்தத் தொழிற்நுட்பம் இந்தியாவிற்கும் வருகிறது.பாஸ்சல் நிறுவனம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றதாகும். உலகம் முழுவதும்
சுமார் 60 நாடுகளில் இவர்கள் கட்டுமான நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

பாஸ்சல் டெக் சிஸ்டம் உத்தரங்களை அமைப்பதற்கு இந்த வழிமுறை மிகவும் பொருத்தமானது. வெவ்வேறு கனம் கொண்ட கான்கிரீட் பாளங்களை உருவாக்குவதற்கும் கையாள்வதற்கும் வசதியானது.  பெரிய, நீளவாக்கிலான உத்தரத்திற்குக் குறுக்காக, சிறிய உத்தரங்களை அமைப்பதற்கு இதை பயன்படுத்துவது எளிது.

ஒரே பாகத்தை இரண்டு திசைகளிலும் பயன்படுத்தலாம். குறுக்காகவும், நெடுக்காகவும் தாங்கப்பட வேண்டிய பகுதிகளுக்கு இது பெரிதும் வசதி அளிப்பதாக இருக்கும். அறைகளின் அளவுகள் எப்படி வேண்டுமானாலும் வேறுபடலாம். அதற்கேற்ற விதத்தில் தனித்தனிப் பகுதிகளாக அமைத்துக் கொள்ள பாஸ்சல் டெக் சிஸ்டம் வசதி அளிக்கிறது. தேவைக்கேற்ற நீளத்திற்கு நீட்டிக் கொள்வதும் எளிது.
பாஸ்சல்  ஈ   டெக் ,ஈ டெக் என்பது கான்கிரீட் ஸ்லாப் அமைப்பு வேலைகளை வெகு எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவும் ஒரு நவீன தொழிற்நுட்பம்.

 மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பாஸ்சல் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு இது.பேனல் அமைப்பு முறையில் இது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இதன் அதிகபட்ச உயரம் 7.5 செ.மீ மட்டுமே. இதன் முகப்பகுதி ஒன்பது அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 12 மி.மீ கனம் கொண்ட பிளைவுட் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த வகைப் பேனல்கள் எடை குறைவானவை. கையாள எளிதானவை. உறுதி உள்ளவை. இருபது கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவை என்பதால் எடுப்பதும் தொடுப்பதும் எளிதாக இருக்கும். இவற்றைக் கொண்டு வேலை செய்வதற்கு தொழிலாளர்களே விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களது உற்பத்தித் திறனும் உயர்ந்த அளவில் இருக்கும்.

இதில் உள்ள இன்னொரு நன்மை என்னவென்றால் இதற்குக் கிரேன் வசதிகள் தேவைப்படாது. ஆட்களைக் கொண்டே அமைக்கலாம்.வேலைகள் நடக்கும் போது விபத்து எதுவும் நேர்ந்துவிடாத வகையில் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். இது இவர்களது வடிவமைப்பு நேர்த்தியைக் காட்டுகிறது. ஸ்லாப்களைஅமைப்பதை விளையாட்டு போல் செய்து முடிக்க ஈ டெக் ஏற்றது. ஒரு அடி கனம் கொண்ட ஸ்லாப்களைக் கூட எளிதாக அமைக்கலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. கிடைமட்ட நிலையில் ஸ்லாப்கள் அமைக்கும் பணிக்கும் ஈ டெக் மிக மிகப் பொருத்தமானது.

கிடைக்கும் அளவுகள்

60X125, 45X125, 30X125, 60X120, 45X120/ 30X120, 60X90,60X85,60X60,30X 60என்ற அளவுகளில் ஈ டெக்குகள் கிடைக்கின்றன. அறைகளின் அளவுகள் விதவிதமாக மாற்றி  அமைக்கப்பட வேண்டிய தேவை வரலாம். அதனால் ஒன்றும் குறை ஏற்படப் போவதில்லை. 5 செ.மீ வரையிலான சின்னச் சின்ன மாற்றங்களைத் தகுந்த விதத்தில் உள்ளடக்கி இணைத்துக் கொள்ளலாம்.
பாஸ்சல் நிறுவனத்தின் ஐ டென்ட் என்ற உத்தி வேறு எந்த நிறுவனமும் அறிமுகப்படுத்தாத ஒன்று என்றே கூறலாம்.

உலர் சுவர் என்றொரு உயரிய தொழிற்நுட்பம் ! DRY WALL TECHNOLOGY


உலர் சுவர் (ட்ரை வால் )எனும் புதிய தொழிற் நுட்பத்தை 1917 ஆம் ஆண்டிலேயே கண்டு பிடித்து விட்டார்கள். இந்தியாவில் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

செயல்படுத்துவது எப்படி?

உலர் சுவர் அமைக்கும் முறையைப் படிப்படியாகக் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக ஜிப்சம் உப்பை எடுத்துக் கொண்டு அதைச் சூடேற்ற வேண்டும். நன்கு அரைக்கப்பட்ட நிலையில் ஜிப்சம் இப்படி வறுத்து எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சூடேற்றும்போது ஜிப்சம் உருகி இளகி ஒரே கட்டியாக உருமாறும். இந்த மாற்றம் நிகழும்போது அதிக அளவு கரியமில வாயு வெளிப்படும். இது புவி வெப்பமயமாவதை விரைவுபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும். இந்த வகையிலான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் போக்கு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இவ்வாறு ஏற்படும் சுற்றுச் சூழல் மாசைக் குறைப்பதற்கு உலர் சுவர் முறை பெரிதும் கை கொடுக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சன்னிவேல் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சீரியஸ் மெட்டீரியல்ஸ் என்ற நிறுவனம் எக்கோராக் என்ற கட்டுமானப் பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதை உற்பத்தி செய்வதற்கு வெப்பம் வேண்டியதில்லை. மூலப் பொருட்களையும் முதன் முறையாக வெட்டி எடுத்துப் பயன்படுத்த வேண்டிய தேவை குறைவு. பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தலாம்.

தேவைப்படாத, தொழிற்சாலைக் கழிவுகளையே 85% வரை மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.
எரிசாம்பல், உலைக்களத் தூசி, கசடு, ஆலைக் கழிவுகள் போன்றவற்றையே மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம். இவற்றைத் தண்ணீருடன் கலந்து அச்சுக்களில் வார்த்துத் தகடு வடிவில் உற்பத்தி செய்யலாம். இதற்கு எந்த விதத்திலும் வெப்பம் தேவைப்படாது. வழக்கமான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பகுதி இருந்தாலே போதும். எவ்வளவு மிச்சம் பாருங்கள்.
ஜிப்சம் பலகைகளைத் தயாரிப்பவர்கள் ஜிப்சத்தை அரைத்துச் சூடேற்றி  அதனுடன் செல்லுலோஸ் ,
ஸ்டார்ச் ஆகிய தாவர அடிப்படையிலான பொருட்களைக் கலப்பார்கள். இவை பலகைகளில் இடம் பெற்றிருப்பதை அந்துப் பூச்சிகளும் கறையான்களும் எளிதில் மோப்பம் பிடித்துவிடும். அரித்துத் தின்று விட ஆரம்பிக்கும்.
எக்கோ ராக்கில் இது மாதிரியான பொருள் எதுவும் இல்லவே இல்லை. எனவே, இதைக் கொண்டு உருவாக்கப்படும் பகுதிகளில் கறையான் தின்று ஓட்டையாகும் கோளாறு ஏற்பட வழி இருக்காது. பூஞ்சை படராது. பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவு.
பராமரிப்புச் செலவும் அதே அளவுக்குக்  குறையும்.

அமெரிக்காவில் இந்த உலர் சுவர் மூலப் பொருட்களால் கிட்டும் நன்மைகளை வெகுவாக உணர்ந்திருக் கிறார்கள். வட அமெரிக்காவில்
மட்டுமே இந்த வகையில் 85 பில்லியன் சதுர அடி உலர் சுவர்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள் என்றால் பாருங்களேன்.
கட்டுமானச் செலவை குறைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் நமக்கு இது மிகவும் தேவைதான்.

அடுத்த தலைமுறை தொழிற்நுட்பம் ! ஆக்டிவ் டே லைட்டிங் ! ACTIVE DAY LIGHTING



என்ன அது ஆக்டிவ் டே லைட்டிங்?
இயற்கையாகக் கிடைக்கும் பகல் வெளிச்சத்தை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்வதுதான் இதன் நோக்கம்.வழக்கமாகச் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் சூரிய ஒளிமின்கலப் பட்டைகளைக் கூரைப் பகுதியில் அமைப்பார்கள். இவை, சூரிய ஒளியை உள்வாங்கி அதனை மின்சாரமாக மாற்றிக் கொடுக்கும். இந்த மின்சாரத்தைக் கொண்டு விளக்குகளை எரிப்பது, காற்றாடிகளைச் சுழலவிடுவது போன்ற வேலைகளைச் செய்து கொள்வோம்.அதற்குப் பதிலாக, ஒளிஇழை வடங்களை ( ஆப்டிக் ஃபைபர் கேபிள்) உபயோகிக்கலாம். இவை சூரிய ஒளியை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த ஒளியை வேறு பல இடங்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும். நேரடியாகச் சூரிய ஒளி பட வாய்ப்பில்லாத, கட்டடத்தின் பிற பகுதிகளுக்கு வெளிச்சத்தை அளிக்கும்.

சூரிய மின் கலப் பட்டைகளையும் ஒளி இழை வடங்களையும் ஒரே சேர அமைக்கும் உத்தியை ஆக்டிவ் டே லைட்டிங் என்று சொல்லலாம்.கூரை மேல் கண்ணாடியைப் பதித்து வைத்தால் அதன் வழியாகச் சூரிய வெளிச்சம் உள்ளுக்குள் வந்துவிட்டுப் போகிறது.. இதற்குப் போய் எதற்காகப் பெரிதாக மெனக்கெட வேண்டும் என்று கருதுவீர்கள். 

இது சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கொள்ள எளிமையான வழிதான். ஆனால் ஒன்றை நினைத்துப் பார்க்க மறந்துவிடுகிறீர்கள். நீங்கள் கூரையில் பதித்து வைத்திருக்கும் கண்ணாடி அதே இடத்தில்தான் இருக்கும்.  சூரியன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே போகும். இதனால் என்ன ஆகும்? அறைக்குள் விழும் வெளிச்சத்தின் கோணம் மாறும். அளவும் மாறும். சில  நேரங்களில் வெளிச்சம் விழாமலேயே கூடப்போய்விடலாம்.இதற்குப் பதிலாக, சூரியன் நகர, நகர அதைத் தொடர்ந்து பின்பற்றும் ட்ராக்கர் என்ற சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்போது சூரியனின் போக்கைப் பின்பற்றிக் கண்ணாடியும் நகரும். அறைக்குள் தொடர்ந்து வெளிச்சம் கிடைத்துக் கொண்டே இருக்க வழி ஏற்படும்.

கூரையிலாகட்டும், சுவர்களிலாகட்டும் ஆங்காங்கே திறப்புகளை ஏற்படுத்தினால் வெளியில் உள்ள வெளிச்சம் தன்னால் உள்ளுக்குள் வரப் போகிறது.. இதற்குப் போய் எதற்கு ஒளி இழை வடம் என்று கேட்க நினைப்பீர்கள்.நீங்கள் சொல்வது போல் சுவர்களிலும் கூரைகளிலும் திறப்புகளை ஏற்படுத்தலாம்தான். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் அந்தந்த அறைகளில் வேண்டுமானால் வெளிச்சம் உள்ளே வரலாம். அடுத்தடுத்து உள்ள, கட்டடத்தின் உட்பகுதிகளுக்கு அதைக் கொண்டு செல்ல இயலாது. அப்படியே கொண்டு சென்றாலும் அதன் அளவும் அடர்த்தியும் குறைந்து போகும்.அடுக்கு மாடிக் கட்டடங்களில் அடுத்தடுத்த தளங்கள் வந்துவிடும் என்பதால் கூரைப் பகுதியில் திறப்பு வைப்பது என்பது இயலாத காரியம்.

ஒளி இழை வடங்களை எங்கு வேண்டுமானாலும் வளைத்து நெளித்து எடுத்துச் செல்லலாம். சிறு துளைகள் வழியாகவும் நுழைத்துக் கொண்டு செல்லலாம்.குறுகலான வளைவுகளைக் கடந்தும் வெளிச்சம் தங்கு தடையின்றிப் பயணிக்கும். இரண்டே இரண்டு அங்குல விட்டம் கொண்ட பகுதிகள் என்றாலும் இத்தகைய மடிப்புக்களால் ஒளியின் பயணம் தடைப்படாது.

சூரிய ஒளி படுகிற இடத்தில் இருந்து, பயன்படுத்தப்பட வேண்டிய பகுதிக்கு ஒளி இழை வடம் மூலம் கொண்டு சென்றுவிடுகிறோம் என்று வையுங்கள். அங்கு இந்த ஒளியை விதவிதமான தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜிசிடி வளைகுடா நாட்டு தொழிற்நுட்பம் !


ஜிசிடி என்பது கல்ஃப் கான்கிரீட் டெக்னாலஜி(Gulf Concrete Technology)  என்பதன் சுருக்கமாகும். போர்டோரிகோ நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் கார்மெலோ குழுமம்.

இவர்கள்தான் ஜிசிடி தொழிற்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்துவதில் கிடைக்கக் கூடிய
தனித் தன்மை வாய்ந்த கட்டுமான வசதிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது  நன்மை தர வல்லது.
முன்னதாகவே கட்டடப் பகுதிகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் நேரத்தில் பொருத்த வேண்டும். இதுதான் இதில் அடிப்படையான விசயம். முப்பரிமாண வடிவில் எடைகுறைவான பகுதிகளை உருவாக்குவது இந்தத் தொழிற்நுட்பத்திற்கு முக்கியத் தேவையாக இருக்கிறது.

விரிவாக்கப்படும் பாலிஸ்டைரீன் கொண்டு பகுதிகளை அமைக்கிறார்கள். இரண்டு வலுவான பலகை போன்ற இடைவெளிகளுக்கு நடுவில் பாலிஸ்டைரீன் இடம்பெறச் செய்யப்படுகிறது. கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு வலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்து அவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பாலிஸ்டைரீனை வைக்கிறார்கள்.
மேலும் உறுதி சேர்ப்பதற்காக, வெளியில் இருந்து இரும்பு ட்ரஸ்களைப் பாலிஸ்டைரீனுக்குள் செலுத்துகிறார்கள். இவற்றை வெளிப்படலத்தில் உள்ள இரும்பு வலைகளுடன் பற்ற வைப்புச் செய்துவிடுகிறார்கள்.
இந்தத் தகட்டின் தடிமன் 10 காஜ் அளவுக்கு உள்ளது.

இதனைக் கொண்டு போய்க் கட்டுமானம் நடைபெற வேண்டிய இடத்தில் நிறுத்துகிறார்கள். வலுவான கான்கிரீட் கலவையை இதன் இரண்டு பக்கங்களிலும் இயந்திரங்களைக் கொண்டு தெளிக்கிறார்கள்.சுவர்கள், கூரைப் பகுதிகள் போன்றவை விரைவாக உருவாகிவிடுகின்றன.இந்த தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல நன்மைகளைப் பெறலாம். ஜிசிடி இன்சுலேட்டட் கான்கிரீட் பேனல் பில்டிங் சிஸ்டம் என்பது ஒட்டுமொத்த உத்தியாகும்.இதைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டடங்களின்  மீது காற்று கடும் வேகத்துடன் மோதினாலும் கட்டடத்திற்கு ஒன்றும் ஆகாது. இந்த வகைக் கட்டடங்கள் மணிக்கு40 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் வீசக் கூடிய சூறாவளிக் காற்றுகளையும் தாக்குப் பிடிக்கக் கூடியவையாக இருக்கும்.

மேலும் , நில நடுக்கத்தையும் தாங்கி நிலைத்து நிற்கக் கூடிய கட்டடங்களைக் கட்ட முடியும். ரிக்டர் அளவுகோலில் 8.5 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தை எதிர்கொள்ளக் கூடிய கட்டடங்களை ஜிசிடி தொழிற்நுட்பத்தின் மூலம் அமைக்கலாம்.வெப்பத்தினால் கட்டடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கலாம். எரிச்சலூட்டக் கூடிய இரைச்சலையும் மட்டுப்படுத்தலாம்.
வளைகுடா நாட்டின் சீதோஷ்ண நிலையை ஒத்த எந்த நாட்டுக்கும் இது ஏற்றது.

இம்பாலா காரில் இன்டீரியர் ஆர்கிடெக்சர் !



ஜாலியாக காரை எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் டூர் செல்கிறோம். ஆனால், போய் சேர்ந்த பிறகு வாகனத்தை விட்டு விட்டு நல்ல ஹோட்டல் எது என தேடி களைத்துப் போகிறோம். நமது பர்சும் இளைத்துப் போகிறது. இப்படிக் களைத்துப் போன ஒரு நபர் கைதேர்ந்த இன்டிரியர் ஆர்க்கிடெக்டாக இருந்தால் என்ன செய்திருப்பார்?

ஹாலந்தைச் சார்ந்த ஒரு இன்டிரியர் ஆர்க்கிடெக்ட் ஜோசப் பெனஸ்கி என்பவர் தனது காரை ஒரு நடமாடும் மினி வீடாக மெனக்கெட்டு மாற்றியிருக்கிறார். அடிக்கடி டூர் செல்லும் அவருக்கு தங்குமிடம் என்பது மிகவும் கடினமாக இருக்கவே மாற்று வழி தேடி ஆராய்ந்ததின் பலன்தான் அவரது வீல் ஹவுஸ்.

  அதிகபட்சம் 15 நிமிடங்களில் இந்தக் கார் வீடாகிறது. மறுபடியும் 15 நிமிடங்களில் வீடு காராகி பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதன் கதவுகள் மேற்புற திறப்பு வகையைச் சார்ந்தது என்பதால் காரை நிறுத்தி விட்டு கதவை மேல்நோக்கித் திறந்து வைத்தால் மிகப் பெரிதான இடம் காரைச் சுற்றியும் கிடைக்கிறது. இந்தக் காரின் இருக்கைகளை மாற்றி  அமைத்தால் படுக்கையறை கிடைத்துவிடும். மேலும், இதில் கிச்சன், ரெஃப்ரிஜரேட்டர், பாத்ரூம் போன்றவையும் உண்டு.

மினி வீடாகவும், மினி ஹோட்டலாகவும் தனது காரை மாற்றிக் கொள்வதால் தனக்கு துவக்கத்தில் செலவிருந்தாலும், இப்போதெல்லாம் தங்கும் இடத்திற்கென தனியே செலவு செய்ய வேண்டியதில்லை என்கிறார் பெனஸ்கி. இவரது ஹாலிடே காரைப் பார்த்த நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் தங்களுக்கும் இதே போன்ற காரை செய்து தரச் சொல்லி ஆர்டர் செய்திருக்கிறார்களாம். பெனஸ்கி தற்போது இம்பாலா கார்களை மினி வீடாக மாற்றி அமைக்கும் முயற்சியில் படு பிஸியாக இருக்கிறார்.
வெள்ளைக்காரர் ஒருவர் இம்பாலா காரில் கைவண்ணத்தைக் காட்டும் போது நமது டூர் பிரியர்கள் இன்னோவா கார்களை டூ இன் ஒன்னாக மாற்றி அமைத்தால் ஹோட்டல்களைத் தவிர்க்கலாமே!