உங்கள் ஊருக்கு நேரில் வருகிறது..
பில்டர்ஸ் லைன் & பிராம்ப்ட் பதிப்பகம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜூலை மாத்தில் , நெய்வேலி, ஈரோடு, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் , ஆகஸ்ட் மாதத்தில்  மதுரையிலும் பில்டர்ஸ்லைன் மற்றும் பிராம்ப்ட் பதிப்பகம் கலந்து கொள்கிறது.



வீடு, ரியல் எஸ்டேட் , இன்டிரியர், வீட்டு பராமரிப்பு, கட்டிடப் பொறியியல் குறித்த நூல்கள்

கட்டிட முகப்பு (எலிவேஷன்) , வரைபடங்கள் ( பிளான்) , இண்டிரியர் மாடல்கள் அடங்கிய சிடிக்கள்  

தமிழ்நாடு கட்டிடத்துறை முகவரி அடங்கிய சிடிக்கள்

பில்டர்ஸ் லைன் தமிழ் மற்றும் ஆங்கிலம் மாத இதழ்களுக்கான சந்தா அனைத்தும் ஒரே இடத்தில்.....



கண்காட்சி       : நெய்வேலி புத்தக கண்காட்சி
இடம்                :  நெய்வேலி வளாகம்
தேதி                 :  ஜூலை  3 முதல் 12 வரை 
தொடர்பு நபர்  :  திரு. தாசபிரகாஷ்
தொடர்பு எண் :  9941 414011

-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        :  நெல்லை புத்தக கண்காட்சி
இடம்                 : நெல்லை
தேதி                  : ஜூலை  19 முதல் 30  வரை 
தொடர்பு நபர்   திரு. சண்முகம்
தொடர்பு எண்  :  88254 79234


-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        : ஈரோடு புத்தக கண்காட்சி
இடம்                 : ஈரோடு 
தேதி                  : ஜூலை  31 முதல் ஆகஸ்ட்  1  வரை தொடர்பு நபர்   திரு. சண்முகம்தொடர்பு எண்  :  88254 79234



-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        :  மதுரை புத்தக கண்காட்சி
இடம்                 : மதுரை
தேதி                  : ஆகஸ்ட்  30 முதல் செப்டம்பர் 10  வரை 
தொடர்பு நபர்   திரு. தாசபிரகாஷ்

தொடர்பு எண்  :  9941 414011

-------------------------------------------------------------------------------------------------------------




பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்த மூன்று கண்காட்சிகளில் பில்டர்ஸ்லைன் மற்றும் பிராம்ப்ட் பதிப்பகம் கலந்து கொள்கின்றன..

  • கட்டிடப் பொறியியல், ரியல் எஸ்டேட், கட்டிடப் பராமரிப்பு, சட்டம் , இண்டிரியர்,கட்டிட பிளான்கள், வரைபடங்கள் குறித்த பல நூல்கள் இப்போது ஒரே இடத்தில்



கண்காட்சி       :  பெரம்பலூர் புத்தக கண்காட்சி
இடம்                :  பெரம்பலூர், நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், 
தேதி                 :  பிப்ரவரி 1 முதல் 8 வரை 
ஸ்டால் எண்   :  26 & 27
தொடர்பு நபர்  : திரு. கமலக்கனண்னன்
தொடர்பு எண் : 90435 72599 , 88254 79234
-------------------------------------------------------------------------------------------------------------

கண்காட்சி        : பில்ட் மேட் -2015
இடம்                 : கோவை கொடிசியா ஹால், கோவை
தேதி                  : பிப்ரவரி 5 முதல் 8 வரை 
ஸ்டால் எண்    :   A - 87 in Hall A
தொடர்பு நபர்   : திரு. சண்முகம்
தொடர்பு எண்  : 78689 14244 , 88254 79234


கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள ' பில்ட் மேட் - 2015' கண்காட்சியில் கீழ்கண்ட கட்டிடத்துறை டேட்டா சிடிகள் விற்பனை செய்யப்படும்.'

1. Tamilnadu Architect Database                              (2,100 Datas)  -------------- Rs.200/-

2.Tamilnadu Civil Engineer Database                      (5,000 Datas)  --------------- Rs.5,000/-

3.Tamilnadu Builders Database                               (14,000 Datas)  -------------- Rs.1,500/-

4. Tamilnadu Real Estate Database                        (8,000 Datas)  ---------------- Rs.750/-

5.Tamilnadu Building Material Suppliers Database (20,000 Datas) ----------------Rs.2,000/-

6. Tamilnadu Interior Database                               (5,000 Datas)  ----------------- Rs.500/-

7.All Over Tamilnadu Construction Industry DB       (61,000 Datas) ---------- ----- Rs. 5,500/-


--------------------------------------------------------------------------------

கண்காட்சி      : பாய் எக்ஸ்போ - 2015
இடம்               : சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை
தேதி                : பிப்ரவரி 13 முதல் 15 வரை 
ஸ்டால் எண்  :  85
தொடர்பு நபர் : திரு. ராஜா
தொடர்பு எண் : 88254 79234 , 98417 43850

--------------------------------------------------------------------------------------------------
கிடைப்பதற்கரிய நூல்களின் அணிவகுப்பைக் காணத்தவறாதீர்



சென்னை புத்தக கண்காட்சியில் பில்டர்ஸ்லைன் & பிராம்ப்ட் பதிப்பகம்

STARTS FROM 13rd  April 2015 

------------------------------------

ஏப்ரல் மாதத்தில் ராயப்பேட்டையில் YMCAதிடலில்


புத்தகச் சங்கமம் கண்காட்சி

பிராம்ப்ட் பதிப்பகம் மற்றும் பில்டர்ஸ் லைன் பங்கேற்கின்றன


நமது பிராம்ப்ட் பதிப்பகத்தின் வெளியீடுகளான 
ரியல் எஸ்டேட், கட்டிடத்துறை, வீடு கட்டுதல், கட்டுமானப் பொறியியல், வீட்டுப் பராமரிப்பு, இண்டிரியர், சட்டம், வாஸ்து தொடர்பான அரிய நூல்கள்...

சென்னை , ராயப்பேட்டையில் YMCAதிடலில்  புத்தகச் சங்கமம் 
கண்காட்சியில் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.


மேலும், பில்டர்ஸ்லைன் 5 ஆண்டு சந்தா ரூ.200 குறைவாக கிடைக்கும்.''

பிராம்ப்ட் பதிப்பகம் மற்றும் பில்டர்ஸ் லைன் 
---------------------------------------------------------------------------------------
இடம் : புத்தகச் சங்கமம் கண்காட்சி  , ராயப்பேட்டை YMCA திடல் ( அரசு மருத்துவமனை எதிரே),  
தேதி : 13.04.2015 முதல் 23.04.2015
நேரம் : 
வேலை நாட்களில் -  மதியம் 2.30 முதல் இரவு 8.30 வரை
விடுமுறை நாட்களில் - காலை 10.00 முதல் இரவு 8.30 வரை

தொடர்பு நபர் : திரு . பா.சுப்ரமண்யம்
செல் : 88254 79234

எங்கள் புத்தக விலைப்பட்டியலை கீழே காண்க





நிறுவும் வேலைகளுக்கு நிறைய நேரம் ஆகிறதா ?



ஒரு கட்டுமானத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஒவ்வொரு பகுதியையும் தயார் நிலையில் செய்து எடுத்துக் கொண்டு வந்திருப்பீர்கள். எல்லாவற்றையும் கோர்த்து இணைக்க வேண்டியதுதான் பாக்கி.ஆனால், பெரும்பாலான வேலைகளில் இது எளிதாக முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பீர்கள். அது இழுத்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.  அவ்வாறு இடையூறுகள், இழுத்தடித்தல்கள் இல்லாமல் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டுமா? சில உத்திகளைப் பின்பற்ற முயற்சியுங்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை மற்றும் அளவுகளில் தேவைப்படும் பாகங்கள் கொண்டு வந்து இறக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் இதைச் சரியாகச் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமானப் பொருட்களைக் கையாளும் விதமும் முக்கியமானது. முற்றிலும் மனித உழைப்பை நம்பியே இயங்க வேண்டி இருப்பதைக் குறைக்க வேண்டும். அது அதற்கு உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்த முன் வர வேண்டும்.

தனித் தனி பாகங்களைச் சரியான வரிசையில் இணைத்துப் பொருத்தும் வேலையை வரிசைப்படி செய்து முடித்து வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது, எந்த இடத்திற்கு எத்தனை எண்ணிக்கையில் பாகங்கள் வந்து சேர வேண்டும் என்பதைத் திட்டமிடுவதே இந்த வேலைகளின் தொந்தரவுகளைக் குறைக்கும் முக்கியப் பகுதியாகும். கொண்டு வந்த பொருட்களை எங்கே இருப்பு வைப்பது என்று திண்டாடும் நிலை ஏற்பட்டுவிடாமல் எல்லா வற்றையும் கச்சிதமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் சொன்னபடி கொண்டு வந்து இறக்கி வைத்துவிடுவார்கள்.

இறக்கி வைப்பதற்கான வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றாலும் திருட்டு, கொள்ளை, கவனக்குறைவு, முறைகேடான கையாள்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படும். 
 
சாரம் கட்டுதல், உயர்த்து வதற்கான மேடை அமைத்தல் போன்ற வேலைகள் எல்லாம் தற்காலிகமானவைதான். வேலை முடிந்ததும் பிரித்து எடுத்துவிடப் போகிறோம், இதற்குப் போய் ஏன் அதிகம் மெனக்கெட வேண்டும் என்கிற மெத்தனம் கூடவே கூடாது.
ஏனென்றால் இம்மாதிரியான ஏற்பாடுகள் பாதுகாப்பில்லாதவையாக இருக்கும். சேதங்கள் ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கவனமாகச் செய்ய வேண்டியது அவசியம்.பாகங்களை எந்த வரிசைப்படி அடுக்க வேண்டும், எந்த வரிசைப்படி எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே பெரிய கலை. இதை உரிய விதத்தில் செய்பவர்கள் வேலைகளை எளிதாகவும் வேகமாகவும் முடித்துவிடுவார்கள்.
    வரிசைக்கிரமத்தை மாற்றுகிறவர்கள் சிண்டைப் பிய்த்துக் கொள்வார்கள்.  வேலைகளிலும் தேவையற்ற தாமதம் திணிக்கப்படும். சின்னச் சின்ன விசயங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது  பெரிய ஆதாயத்தைக் கொடுக்கும்.சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் நிறுவும் வேலைகளுக்கு ஏன் நிறைய நேரம் ஆகப் போகிறது?

உலர் காரை தயாரிக்க உருப்படியான இயந்திரம் !



காரை என்றால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் நேரங்களில் ஈரமாகத்தானே இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். பயன்படுத்தப்பட்ட பிறகுதானே காரை உலர வேண்டும் என்றும்  எண்ணுவார்கள். அது என்ன உலர் காரை?உலர் காரை என்பது ஒரு புதிய தொழிற்நுட்பம்.  காரைக்கான தேவை அதிக அளவு இருக்கும்போது இந்தத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தித் திறன் உயரும். வேலைகளை விரைந்து முடிக்கலாம்.

தரம் எப்படி?

உலர் காரையைப் பயன்படுத்துவது கட்டுமானத்தின் தரத்தைப் பாதிக்குமா? அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. உலர் காரையின் தரம் என்பது கலவை விகிதத்தைப் பொறுத்தது. கலவை எந்த அளவுக்குச் சீராக உருவாக்கப்படுகிறது என்பதை வைத்தும் தரத்தை முடிவு செய்யலாம். எனவே, தரமான உலர் காரையைத் தயாரிப்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

காரையின் தேவைகாரையை எந்தெந்த வேலைகளுக்குப் பயன்படுத்துகிறோம்? செங்கல் கட்டுமான வேலைகளுக்கு இது அவசியம் தேவைப்படும். இணைப்புகளை வலுவுள்ளவையாக ஆக்குவதற்கும் காரை வேண்டி இருக்கும். ஓடுகளை  அதனதன் இடத்தில் ஒட்டிப் பதிப்பதற்கும் காரை முக்கியம். மெல்லிய இடு தளத்தை உருவாக்கவும் காரையைப் பயன்படுத்த வேண்டும். இப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதத்தில் காரையைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. காரைத் தயாரிப்பு முறைகளும் வேறுபடுகின்றன.

இந்த வேலைகளை எல்லாம் பொதுவாக ஒரே இயந்திரத்தில் செய்ய முடிந்தால்? இந்தச் சிந்தனையின் விளைவாக, நார்வேயைச் சேர்ந்த ஃபோர்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் டாஷ்வால் இரட்டைஷாஃப்ட் உலர் காரைக் கலவை இயந்திரம்.

நன்மைகள் என்ன?

கலவையின் தரம் மிக உயர்ந்ததாக இருக்கும். எதிர்பார்க்கும் தரத்திலான கலவையை எளிதில் உருவாக்கிவிடலாம். கலவையைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.  உற்பத்தி ஆலையின் செயல் திறனை மேம்படுத்தலாம். பராமரிப்புத் தேவைகள் குறைந்த அளவுக்கே இருக்கும்.
கலக்கும் வேலையைச் செய்யும் இயந்திரப் பகுதிகளில் உராய்வு, சிக்கல் என எதுவும் ஏற்படாதவகையில் கலக்க வேண்டிய பொருட்கள் உள்ளுக்குள் இடப்பட வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரத்தின் தேய்மானம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இது இயந்திரம் நீண்ட காலம் உழைப்பதற்கு வழி வகுக்கும்.

கலவைகளைத் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று நீங்கள் ஒரு கணிப்பை வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த இயந்திரத்தின் மூலம் 3 விநாடிகள் முதல் 3 நிமிடங்களுக்குள் கலவை வேலைகளை முடித்துவிடலாம் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். கலக்கும் வேலைகள் சீராகவும் ஆரவாரத்திற்கு இடமில்லாமலும் அமைதியாக நடக்கும். மிகக் குறைந்த பராமரிப்பே போதும். மின்சாரமும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சொந்த உபயோகத்திற்கு மட்டுமின்றி, வியாபார ரீதியாகவும் இதை பயன்படுத்த முடியும்.

நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான்அட்மிக்ஸ் ! (PENETRON ADMIX)


கட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்கவல்ல சேர்மானப் பொருளாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறது பெனிட்ரான்அட்மிக்ஸ்(Penetron Admix)எனப்படும் கலவை. இது அண்மைக்கால அதிநவீனக் கண்டுபிடிப்பு. கான்கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வதில் ஈடு இணையற்றது.

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்திலேயே, தயாரிப்பு வேலைகள்  நடக்கும் போதே கலக்கலாம். ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைகளிலேயே கலந்து கொள்ளலாம். கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப்படுவதாக இருந்தால் அதே இடத்திலேயும் கலக்கலாம்.
பெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக்குக் கலப்பது? கான்கிரீட்டில் இடம் பெற்றிருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட்களின் எடையில் நூற்றுக்கு   0.8 என்ற விகிதத்தில் கலந்தால் போதும். இந்த முறையைப் பயன்படுத்துவது மிக மிகச் சிக்கனமானதாக இருக்கும். தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மீண்டும் தனி வேலைகளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஏற்கனவே இடப்பட்டுள்ள கான்கிரீட்டா? அதனால் பரவாயில்லை. அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ஆலைகளில் முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் இடத்தில், நேரத்தில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம்.

நிரூபணம் தேவையா?

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன்களைக் சோதித்துப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில்  ஒரு கட்டுமானத்தில் சில சோதனைகளை மேற்கொண்டார்கள். ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவையைப் பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேறியது. தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில்
மட்டும் ஈரம் தென்பட்டது. இது தொட்டியின் விளிம்பிலிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காணப்பட்டது.

இந்த நேரத்திற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது. வெடிப்புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள்வதைக் கண்ணால் காண முடிந்தது. முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்தவொரு வெடிப்பும் படிகங்களால் அடைக்கப்படாமல் இல்லை என்பதை உணர்ந்தார்கள். படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப்புகளை அடைத்துக் கொள்கின்றன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.

கடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ்

கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைப் பராமரிக்கவும் பழுதுபார்க்கவும் எழும் தேவைகள் பலவிதமானவை. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டுமானங்களின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீருக்குள்தான் மூழ்கிக் கிடக்கும்.கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்துவிடும்.இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டுமானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும்.

அந்தரத்தில் ஆடும் வீடு !




தரையில் போதுமான அஸ்திவாரம் இருந்தாலே ஆட்டம் காணும் கட்டிடங்கள் நம் நாட்டில் அதிகம். ஆனால், கட்டிடத்தில் 60 சதவீதம் அந்தரத்தில் அமைக்கப்பட்டும் ஆடாமல் இருக்கிறது. இது நார்வே ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸ் என்பவரின் கைத்திறம்.

    வின்னி மாஸுக்கு சொந்தமான பண்ணை நிலம் ஒன்று இருக்கிறது. அங்கு தனது ஓய்வு வீட்டை வடிவமைக்க நினைத்த போது இடம் போதவில்லை. ஏனெனில், அவரது நிலத்தில் சுமார் 20 அடி அளவிலான பெரிய சரிவு ஒன்று இருந்தது. முதலில் அந்த சரிவினை நிரப்பி மேல்மட்டத்துடன் சமப்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால், அவரது ஆர்க்கிடெக்ட் மூளை விழித்துக் கொண்டு பாதி நிலத்திலும், பாதி அந்தரத்திலும் ஏன் வீட்டை அமைக்கக்கூடாது? என கேள்வி கேட்கவே படத்திலுள்ள வீட்டை வடிவமைத்து கட்டியும் முடித்துவிட்டார்.
50 அடி நீளமும், 20 அடி அகலமும் உடைய இந்த வீடடில் 20 அடி நீளப்பகுதி உயர்மட்டத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 30 அடி நீளப்பகுதி யாதொரு தாங்கு தூண்களும் இன்றி  அந்தரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தில்லையா என ஆர்க்கிடெக்ட் வின்னி மாஸிடம் கேட்டபோது, “பொதுவாக இதுபோன்ற கட்டுமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிச்சயமாக நிலத்தில் ஊன்றியிருக்க வேண்டும் என்பது விதி. அதை இங்கு நான் தைரியமாக மீறியிருக்கிறேன். ஆனால், எவ்வித ஆபத்தும் இதற்கில்லை. ஏனெனில் அந்தரப் பகுதியில் இருக்கும் வீட்டிற்கான கவுன்டர் வெயிட்டை 6 கான்கிரீட் பில்லர்கள் கொண்டு நிலப்பகுதியில் ஏற்றியிருக்கிறேன்” என்கிறார் வின்னி மாஸ். கடல் அரிப்பிற்குப் பிறகு கடலோரம் கட்டப்பட்ட வீடுகள் இந்தியாவில் பெரும்பாலும் அந்தரத்தில்தான் ஆடும் என்பது வேறு விஷயம்.