சுமாரான பட்ஜெட்டில் சூப்பரான இன்டீரியர்! மே-2013


வீடு கட்டும்போதே அதற்குரிய இன்டீரியர் பற்றியும் திட்டமிடும் காலமிது.என்றாலும், பலரும் பெரும் பணத்தை செலவழித்தும் தங்களுக்குப் பிடித்தாற்போல் வீடு மற்றும் அலுவலகத்தின் இன்டீரியர் அமையவில்லையே என குறைபட்டுக்கொள்வார்கள். ஆனால், உங்கள் வீட்டின் அறைகளின் அளவையும், பட்ஜெட்டையும் சொல்லி விட்டால், அதற்கேற்றாற்போல் கண்ணைக் கவரும் பல்வேறு வகையான மனதை மயக்கும் இன்டீரியர்களை அமைத்து தந்து விடுகிறார்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜே இன்டீரியர்ஸ் நிறுவனம். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என பல்வேறுவகையான புராஜெக்டுகளுக்கும் இன்டீரியர் பணிகளை தங்களுடைய குழுவினருக்கு பிஸியாக பிரித்துக் கொடுத்து கொண்டிருந்த ஜே இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எட்வின் கிறிஸ்டஸ் அவர்களை சந்தித்தோம் உங்கள் இன்டிரியரின் வகைகள் என்னென்ன? “”நாங்கள் ஆரம்பத்தில் கலாச்சார ரீதியாக அனைத்து இன்டீரியர்களையும் வடிவமைத்து தந்திருக்கிறோம். இப்போது நவீனமயமாக்கல் காரணமாக அனைவரும் புதுமையை விரும்புவதால், அலங்காரப் பொருட்கள், விளக்குகள், சுவர்களில் ஒட்டப்படும் வால் பேப்பர்கள் முதலியனவும் மற்றும் ரெசிடென்ஷியல், கமர்ஷியல், அலுவலகம் போன்ற மூன்று வகைகளில் இன்டீரியர் வடிவமைப்பை செய்து வருகிறோம். தொடக்கத்தில் திருப்பூரில் ஆரம்பித்தோம். பிறகு கோவையில் ஒரு கிளையை தொடங்கினோம். நிறுவனத்தை மேலும் பலப்படுத்த சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறோம். எங்களின் தனிச் சிறப்பு என எடுத்துக் கொண்டால், வீடுகளில் அமைக்கும் இன்டீரியர் பணிகளுக்கு கவனம் எடுத்து செய்து வருகிறோம். ஏனெனில், கமர்ஷியல், ஆபீஸ் ஆகிய இரண்டு வகை இன்டீரியர்களில் இதுவரை செய்த டிசைன்கள் அனைத்திலும் வெற்றி பெற்று விட்டோம். மேலும், இவை இரண்டும் டிசைனர்களுக்கு சுலபமானதாகும். ஆதலால் வீடுகளில் மேற்கொள்ளப்படும் டிசைன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். மேலும், வீட்டைப் பொறுத்தவரை வாடிக்கையாளர் விரும்பும் வடிவத்தில் அமைக்க வேண்டும். சமையலறை, படுக்கையறை, குழந்தைகள் அறை என அனைத்து விக்ஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனவே, எங்கள் நோக்கம் அனைத்தும் வீடுகளே. எங்களிடம் தகுதி வாய்ந்த 35க்கும் மேற்பட்ட டிசைனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கணினி மூலம் உருவாக்கும் அற்புதமான டிசைன்களை வாடிக்கையாளர்களிடம் காட்டி, அதற்குப் பிறகே இன்டீரியர் பணிகளைத் துவங்குகிறோம். அறிவியல் ரீதியாக அனைத்து டிசைன்களையும் வாஸ்து முறைப்படி, வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் அமைத்து தருகிறோம். அவர்கள் திருப்தி அடையும் வகையில் டிசைன்களை அவர்களுக்கு தோதாக மாற்றித் தருகிறோம்’’. தங்களுடைய புராஜெக்டுகளின் இன்டீரியருக்காக உங்களை நாடிவரும் பில்டர்களுக்கு தாங்கள் அளிக்கும் சலுகைகள் பற்றி .. “”எங்களிடம் வரும் அனைத்து பில்டர்களுக்கும் சலுகைகள் நிச்சயம் உண்டு. அது பில்டர்களின் கட்டு மான பட்ஜெட்டைக் கொண்டு முடிவு செய்யப்படும். மேலும், எவருக்கும் பாகுபாடின்றி ஒரே மாதிரியான முறையில் வாடிக்கையாளர்கள், பில்டர்கள் திருப்தியடையும் வகையில் சலுகைகள் வழங்குகிறோம்’’. சென்னையில் உங்கள் பணிகள்.. ”சென்னையில் கம்பீரமாக நிற்கும் பல கட்டுமானங்களில் இன்டீரியர் பணிகளை செய்து வருகிறோம். கூடிய விரைவில்உஸ்மான் சாலையில் உள்ள ‘ஸ்ரீ கோல்ட் ஜுவல்லரி’ நிறுவனத்தில் இன்டீரியர் அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவிருக்கிறோம். சென்னையில் பிரபலமான VIP-களின் வீடுகளிலும் இன்டீரியர் ஒர்க்கை செய்து வருகிறோம்’’ என்றார் எட்வின் கிறிஸ்டஸ். பளபள இன்டீரியருக்கு ஆசைப்பட்டு ஆனால் விலையைக் கண்டு தயங்கும் பலரும் இனி தங்கள் பட்ஜெட்டுக்கேற்ற இன்டீரியர் பணிகளை செய்து தரும் இந்நிறுவனத்தை அணுகலாம்: J Interiors Pvt. Ltd., Old No.20, New No.37, Teachers Colony, Adyar, Chennai-20 Mobile: 9843043350, 98434 73350 E-mail: info@jinteriors.in Web: www.jinteriors.in