சுமாரான பட்ஜெட்டில் சூப்பரான இன்டீரியர்! மே-2013
மாணவர்களை முதன்மை ஆக்குவதில் முதன்மையான கல்லூரி-மே-2013
ஃபோம் கான்கிரீட் கற்கள்!மே-2013
தானே சொல்லும் பாடம்! மே-2013
தமிழ்நாட்டுக்கும் வருமா 'தானே'வின் நிலைமை?மே-2013
தேர்வுகளின் தீவிரம் துவங்கியிருந்த ஏப்ரல் மாதம். மாலை 5.10. மராட்டிய மாநிலத்தில் தானே மாவட்டம், மகாவே சாலையில் 5 தளங்கள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருபுறம் பரீட்சைக்கு எந்தக் கேள்விகளைப் படிப்பது? எந்தக் கேள்விகளை விடுவது என பதைத்துக் கொண்டிருந்த மாணவர்கள். ஒருபுறம் அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்த பெற்றோர்கள். ஒருபுறம் உறங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த குழந்தைகள்.
சட் சட் சட், சடார்...
அத்தனைப் பேருக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. பூகம்பமா? வெடிகுண்டா? என யோசிப்பதற்குள் புழுதிக்காடாய் சரிந்து விழுந்தது அந்த தானே குடியிருப்பு.
அந்தக் குடியிருப்பில் வசித்த 28 குடும்பங்களில் சுமார் 74 பேர் உயிர் இழக்க, 60 பேர் படுகாயம் அடைந்ததாக பிறகு வந்த தகவல்கள் பதிவு செய்தன. ஏன்? என்னவாயிற்று அந்தக் கட்டிடத்திற்கு?
2011 ல் துவங்கப்பட்ட அந்த குடியிருப்பு புராஜெக்ட் 2013 பிப்ரவரியில் முடிவுற்றது. அதற்குப் பிறகு வாக்களித்தபடி தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை ஒப்படைத்திருக்கிறார் அதன் கட்டுநர். அதன் பிறகு தொடர்ந்து அந்த குறிப்பிட்ட கட்டுமானத்தின் மீதே 6, 7 அடுக்குமாடிகளை தொடர்ந்து கட்டியிருக்கிறார் அந்த பேராசை கொண்ட கட்டுநர்.முதலில் கட்டிய 5 அடுக்குகளுக்கும் சரி, பின்னர் கட்டிய 2 அடுக்குகளுக்கும் சரி, யாதொரு அனுமதியும் பெறவில்லை என செய்தி வெளியிட்டது தூக்கம் கலைந்து எழுந்த அந்த மாவட்ட நகராட்சி.
கட்டிட விதிகளை மீறிய தவறுகளைத் தவிர, மண் பரிசோதனை, கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டது. மற்றும் தரமற்ற கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊடகங்களும், கட்டிடவியல் நிபுணர்களும் அள்ளித் தெளிக்கின்றனர். இது தவிர, மேலும் பல முறைகேடுகள் இந்த குடியிருப்பு கட்டுமானத்தில் நடந்திருக்கின்றன.
1. விதிகளின்படி ஒரு கட்டுமானம் முழுமையாக நிறைவுற்ற பிறகு பணி முடிவு சான்றிதழ் நகராட்சியால் வழங்கப்படும். அதற்குப் பின்பே, குடும்பங்கள் குடியமர்த்தப்பட வேண்டும். இந்த விக்ஷயத்தில் அது நடைபெறவில்லை. (இந்த நிலைமை சென்னையிலும் உண்டு. உரிய கால அவகாசத்தில் பணி நிறைவு சான்றிதழைத் தராமல் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்பது கட்டுநர்களின் குற்றச்சாட்டு).
2. சில கட்டுநர்கள் தங்களது கட்டுமானத்தை பகுதி பகுதியாக முடித்து விற்பனை செய்வார்கள். அதாவது 2 பேஸ் (பிளாக்குகள்) கொண்ட குடியிருப்பு எனில், ஒரு பிளாக் கட்டிடம் முடிந்த பிறகு வாடிக்கையாளர்களைக் குடியமர்த்தி விட்டு அருகாமையிலேயே இன்னொரு பிளாக் கட்டுமானத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இதனால், ஒலி மற்றும் சுற்றுப்புற மாசுத்தொல்லை
ஏற்படும் என்பதால் இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். மேலும்,
கட்டுமானப் பணி நடைபெறும்போது ஒரு பக்கம், இயந்திரங்கள், வாகனங்கள் வருவதும், போவதுமாக இருக்கும். அந்த சமயத்தில் பணிகள் முடிவுற்ற கட்டுமானத்தில் வசிக்கும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு விபத்துகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆகவே, குறைந்தபட்சம் முடிவுற்ற பிளாக்குகளை தனிக் கட்டிடமாக வழி ஏற்படுத்தி, தடுப்புகளையாவது கட்டுநர் நிறுவ வேண்டும்.
‘தானே’ குடியிருப்பில் இதுவும் நிறைவேற்றப்படவில்லை.
3. எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு முடிவுற்ற கட்டுமானத்தில்
மனிதர்கள் வாழும்போது அதற்கு மேல் கட்டுமானங்கள் அமைப்பதற்கு அனுமதியில்லை.(மிகச் சிறிய கட்டுமானங்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். உதாரணம், தண்ணீர் தொட்டி கட்டுதல், சிறிய ரூம் அமைத்தல்).ஆனால், அடுத்தடுத்து இரண்டு மாடிகளை மிகவும் புதிதாகக் கட்டப்பட்ட கட்டுமானத்தின் மீது யாதொரு பயமுமின்றி தொழிற்நுட்ப அறிவுமின்றி, ஒரு கட்டுநர் கட்டுகிறார் எனில் அவருக்கு எத்தனை பேராசை இருந்திருக்க வேண்டும்?
4. இது தவிர, அங்கு வசித்த குடும்பங்களைப் பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும். ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் பணத்தைக் கொடுத்து வீட்டை வாங்கிய மக்கள் எனும்போது நிச்சயம் அவர்கள் படிக்காத கீழ்த்தட்டு மக்களாக இருந்திருக்க மாட்டார்கள். நகராட்சியால் வழங்கப்படுகிற பணிநிறைவு சான்றிதழை வாங்கி சரி பார்க்காமல், உடனேயே புது வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என பேராவல் கொண்டது, மற்றும் தாங்கள் குடியிருக்கும்போதே தங்கள் வீட்டிற்கு மேல் நடைபெறும் கட்டுமானத்தை எதிர்க்காமல் போனது ஆகியவை இரண்டுமே வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும் கூட என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் நன்கு புலனாகிறது.
“ ‘தானே’ கட்டிடம் ஒரு வெளிப்பட்ட உதாரணமே தவிர, அதைப் போன்றே பெரும்பாலான கட்டிடங்கள் நாடு முழுவதிலும், ஏன்? நம் தமிழ்நாட்டிலும் உருவாகி வருகின்றன” என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் திரு. ராஜாராம்.கட்டிடவியல் நிபுணரான திரு. ராஜாராமிடமும், ‘தானே’வில் நடந்த இந்த கோர கட்டிட விபத்து தமிழ்நாட்டிலும் நடைபெறுவதற்கு வாய்ப்புண்டா? எனக் கேட்டபோது
“இதற்கு முன்பு கோவையில் ஒரு கட்டிடம் புதைந்துபோனது உங்களுக்கு நினைவில்லையா? அதைப்பற்றி சில நாட்கள் எல்லோரும் பேசினார்கள், எழுதினார்கள். பின்பு அதைப்பற்றி மறந்தே போனார்கள். காலம் காலமாக மண்பரிசோதனை செய்யாமலும், கட்டிட வடிவமைப்புகளை ஆராயமலும் கட்டிடங்களைக் கட்டுவது என்பது தமிழ்நாட்டிலும் உண்டு.
சென்னை நகருக்குள்ளாவது பரவாயில்லை. கொஞ்சம் புறநகர் வந்து பாருங்கள். எத்தனை கட்டிடங்களை விதிகள் மீறி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது தெளிவாகப் புரியும். ஊரப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் தரைதளம், மற்றும் ஓரடுக்கு கட்டுமானங்களுக்கு (ஜி+1) டி.டி.சி.பி. அப்ரூவல் தேவையில்லை என்பதால் உள்ளூர் பஞ்சாயத்து அனுமதி இருந்தாலே போதும் என்கிற நிலைமை உள்ளது. கட்டிடம் பற்றிய விழிப்புணர்களை ஏற்படுத்த விருப்பம் இல்லை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு கட்டிடம் சரிந்து, விபத்தினை ஏற்படுத்தி பல குடும்பங்களை பலி கொள்கிறது என்றால் அதற்கு கட்டுநர்கள் மட்டுமே காரணம் இல்லை. முதலில் அரசு, பிறகு உள்ளூர் நகராட்சி அமைப்பு, அதற்குப் பிறகு கட்டுநர், அவரிடம் பணிபுரியும் அதிகாரிகள், முறைகேடான கட்டு
மானத்தில் முறையாக விசாரிக்காமல் வந்து குடியமர்ந்து மக்கள் இவர்கள் அனைவருக்குமே அந்த உயிர்ச்சேதத்தில் பங்கு இருக்கிறது என்று அர்த்தம்” என்கிறார் ராஜா.
அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும் நிறுவனங்கள், பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? இவற்றுக்கு அனுமதி அளிக்கும் அரசு துறைகள் எப்படி கண்காணிக் கின்றன? கட்டிடத்தின்பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை மட்டுமல்லாது, நம் பாதுகாப்பையும் வீடு கட்டுபவரை நம்பிக் கொடுக்கிறோம்.ஆனால்,இந்த கட்டிடத்தை கட்டி முடித்து விற்பனை செய்தால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை மட்டும் கணக்கு போட்டு செயல்படும் சில கட்டுமான நிறுவனங்களால் இத்துறையில் நியாயமாக செயல்பட நினைப் பவர்கள் பெயரும் கெடுகிறது.குறைந்த காலத்தில், அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதில் ஏற்பட்டுள்ள போட்டியும், ‘தானே’ சம்பவத்துக்கு ஒரு காரணமாக உள்ளது என்பது உண்மை.
கட்டுமானத் தொழிலில் விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக, அரசு தரப்பில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும், அவை எந்த அளவுக்கு அமலாக்கப்படுகின்றன என்பது பொறுத்துதான் தானேவின் நிலைமை தமிழ்நாட்டிலும் வெளிப்படுமா? என்கிற கேள்விக்கு பதில் இருக்கிறது.
தானமைவு கான்கிரீட்டின் வரவேற்பு! மே-2013
கார்பென்டருக்கு 25 டிப்ஸ்கள்! மே-2013
இன்றைய கட்டுமானத்துறையில் எத்தனைதான் தொழிற்நுட்பம் புதிது புதிதாக வந்தாலும், மர வேலைகளுக்கு இருக்கும் மவுசு ஏறிக்கொண்டேதான் வருகிறது. கார்பென்டர்களுக்கான கணிசமான சம்பளமும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. நீங்கள் கார்பென்டராக இருந்தால் உங்களது திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இதோ 25 டிப்ஸ்கள்.
1. எந்த வகை மரத்தைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு நீங்கள் ஆலோசனை
சொல்லலாம். குறிப்பிட்ட மரத்தைத்தான் வாங்க வேண்டும் என்று அடித்துச் சொல்ல வேண்டாம்.
2. வீட்டுக்காரர்கள் விரும்புகிற இடத்தில், கடையில் மரங்களை வாங்கட்டும். நீங்கள் குறிப்பிடும் கடையில்தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
3. மரம், பிளாஸ்டிக், உலோகம் என எதுவாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வீட்டு உரிமையாளர்கள்தான். எனவே, அவர்களது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
4. குறிப்பிட்ட பயன்பாட்டிற்குக் குறிப்பிட்ட பொருள் பொருத்தமாக இராது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டுக்காரர்களுக்கு அந்த அளவுக்குத் தெரிந்திருக்காது. என்னென்ன சங்கடங்கள் வரக்கூடும் என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.
5. முன்பணம் வாங்குவதில் கவனமாக இருங்கள்.உங்கள் வேலைக்கு மீறிய தொகையை முன்கூட்டியே வாங்க முற்படாதீர்கள். ஒருவேளை உங்களால் வேலையை முடிக்காமல் போனால் உங்களுக்குத்தான் அதிகச் சுமையாக அமைந்துவிடும்.
6. கருவிகளைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள். தீட்டுவதற்கு நேரம் வீணாகிறதே என்று பார்க்காதீர்கள். வெட்டும் வேலையை விரைவில் முடித்துவிடலாம்.உங்கள் நண்பர்களே உங்கள் கருவிகளைக் கடன் கேட்பார்கள். அதை முடிந்த அளவு தவிர்க்கப் பாருங்கள்.
7. ஒருசிறிய நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள்,அவற்றைத் தவிர்த்த விதம், வேலையில் நீங்களே கண்டுபிடித்த புதிய உத்தி போன்றவற்றை அதில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே அதுபெரிய உதவியாக இருக்கும்.
8. தேவைப்படும் அளவு மரத்தைச் சரியாகக் கணக்குப் போட்டுவாங்கி வாருங்கள். எதையும் வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
9. நீங்கள் வேலை செய்யும் இடம் வெயில்,மழைக்குப் பாதுகாப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டம் அவசியம். வீட்டிலேயே உங்கள் பட்டறையை வைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களா? பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
10. உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூலி, நேரக் கணக்குப்படியா? நாள் கணக்கா? அல்லது பொருள்எண்ணிக்கையைப் பொருத்ததா? என்பதைத் தெளிவாக்குங்கள் . இதை ஒரு ஒப்பந்தம் போல் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் சங்கடம் வராமல் தவிர்க்கலாம்.
11. உங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப வேலைகளைப் பிடியுங்கள். பேராசைப்பட்டு அதிக
வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அல்லல்படாதீர்கள்.
12. உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உழைக்கும் நேரத்தை வரையறை செய்து கொள்ளுங்கள்.வேலை செய்யும்போது முகத்தில் துணி கட்டிக் கொள்வதுபோன்ற சின்னச் சின்ன விக்ஷஷயங்களில்அலட்சியம் காட்டாதீர்கள்.
13.எப்பொழுதுமே புதுவித கிரியேட்டிவிட்டி படைப்புகளுக்கு மவுசு அதிகம். வழக்கமான கட்டில்கள், அலமாரிகள், ஃபர்னிச்சர்களுக்குப் பதிலாக, புது வடிவத்தில், அசத்தலான தோற்றத்தில், நிறைய மரத் தயாரிப்புக்களை உருவாக்குங்கள். இவற்றை உங்களது பட்டறையிலோ, நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ காட்சிக்காக வையுங்கள். அவற்ஷூல் நிச்சயம் கவரக்கூடியத் தன்மை இருந்தால், நீங்களும் நிச்சயம் பிரபலமாவீர்கள்.
14.நகரங்களில் இப்போது பெரும் பற்றாக்குறையே இடம்தான். எனவே, இடத்தைச் சேமிக்கிற எந்த விக்ஷயத்திற்கும் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் தயாரிக்கும் பொருட்களும் இடத்தைக் குறைவாகப் பயன்படுத்துகிற, ஆனால் பயன்பாடுகள் அதிகமாக இருக்கிறவையாகவே உருவாகட்டும். பிறகு பாருங்கள், உங்களது தயாரிப்புகள் சந்தையில் எப்படிப் பேசப்படுகின்றன என்பதை.
15. தற்போது மல்டி பர்போஸ் ஃபர்னிச்சர்கள்தான் பிரபலமாகி வருகின்றன. அதாவது, நீட்டினால் சோஃபா, மடக்கினால் மேஜை, மடித்தால் நாற்காலி என்பது போன்ற ஃபர்னிச்சர்களை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது?
16. நீங்கள் செய்யும் எல்லா பொருட்களையுமே பார்த்தவுடன் அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்பதை உங்கள் சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளரும் உணரும் வகையில் உருவாக்குங்கள். அதாவது, ஓரத்தில் விநாயகர், சிலுவை, லோகோ போன்றவற்றைப் பொறிப்பது.
17. நீங்கள் சொந்தமாக பட்டறை வைத்திருந்தால், அதன் ஒரு ஓரத்திலேயே சிறிய மரக்கிடங்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரிதாகக் கிடைக்கிற மர வகைகளை எத்தனை காசானாலும் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதானாலும் அது நமக்கு லாபத்தைத் தரும்.
18. உலகளாவிய மரங்கள் மற்றும் ஃபர்னிச்சர் சந்தையைப் பற்றி அப்டேட்டாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
19. எந்த புதிய அறிவியல் மாற்றம் வந்தாலும், அதனுடன் உங்கள் தொழிலை எவ்வாறு இணைப்பது என்பதை யோசியுங்கள். உதாரணத்திற்கு, டெலிபோன் போய் செல்போன் வந்தது, தற்போது செல்போன் போய் ஆன்ட்ராய்டு, ஐ போன் வந்திருக்கின்றன. இவை சற்று அளவு பெரிது. இவற்றிற்கு ஏற்றாற்போல மர ஸ்டான்டுகளை, சார்ஜர் பாக்ஸ்களை நீங்கள் உருவாக்கலாம். இவை ஒரு உதாரணம்தான். இவை போன்றே, நீங்கள் பல மின்னணு சாதனங்களுடன் சுலபமாகத் தொடர்புப்படுத்தலாம்.
20. குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் முகவரி, அலைபேசி விவரங்ளைப் பொஷூத்துவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து முடிக்கும் பொருட்களின் மேல் அவற்றை ஒட்டிக் கொடுங்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும்.
21. புதிதாகச் செய்வதுமட்டுமே என் வேலை என்று வைத்துக் கொள்ளாதீர்கள். பழையவற்றைப் பராமரிப்பதும் பழுதுபார்ப்பதும் கூட நல்ல பணிதான். அதில் உங்களுக்குப் புதிய, பயனுள்ள அனுபவங்கள் கிடைக்கும்.
22. மிகவும் பழமை வாய்ந்த மரச் சாமான்கள், கட்டடப் பொருட்களைக் காண நேர்கிறதா? விற்பவர்களிடம் பேரம் பேசி வாங்குங்கள். பழம் பொருட்களுக்கு நல்ல சந்தை இருக்கிறது இதில் நீங்கள் கணிசமாக ஆதாயம் பார்க்கலாம்.
23. சில நேரங்களில், செய்வதற்குவேலை ஒன்றும் கிடைக்காமல் போகலாம். அப்போது நீங்களே கொஞ்சம்முதலீடு செய்து சில பொருட்களைத் தயாரியுங்கள். முடிந்தபோது விற்றுக் கொள்ளலாம்.
24.வெளிநாட்டுப் பத்திரிகைகள், தொழிற்நுட்ப வீடியோக்களைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள, புத்தகங்களைப் படியுங்கள். நன்கு வேலை தெரிந்தவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பலருக்கும் கற்றுக் கொடுங்கள். இதில் தொழில் இரகசியம் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.
25. மொத்தமாக ஒரு ஆர்டர் எடுக்கும்போது கொஞ்சம் விலையைக் குறைத்து காசு வாங்குவது நமது இயல்பு. ஆனால், அதன் கூடவே இலவச இணைப்பாக ஏதேனும் ஒரு சிறிய, ஆனால் அசத்தலான கைவினைப் பொருள் ஒன்றை செய்து இலவசமாக வாடிக்கையாளருக்கு வழங்குங்கள். அது சிலையாகவோ, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளாகவோ இருக்கலாம். பெங்களூருவில் ஒரு கார்பென்டர் வாடிக்கையாளர் உருவத்தை அச்சு அசலாக மரத்தில் வடித்து, சிற்பமாகச் செய்து, பரிசாகக் கொடுத்து அசத்துகிறாராம். நீங்கள் ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்யுங்களேன்!
Subscribe to:
Comments (Atom)


