பொருள் ஒன்று பயன் இரண்டு ஜெட்ரிவால் ஒட்டுபசை !..


ஒட்டுப்பசைகளை ஒட்டுகிற தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம். இல்லை.
அதே பசையை நீர்க்கசிவைத் தடுப்பதற்குரிய பொருளாகவும் பயன்படுத்தலாம்.
இதில் கிடைக்கும் நன்மைகள் : ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கொண்டு செராமிக்(பீங்கான்) ஓடுகளை ஒட்டுவது எளிதானது. பிடி
மானமும் உறுதியாக இருக்கும். சிறு சிறு இடைவெளிகள், காலி இடங்களில் பழுதுபார்ப்பு, அலங்கரிப்பு நோக்கிலான ஒட்டு வேலைகளைச் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
மின்சாரத்தைக் கடத்த அனுமதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டிய தட்டையான பலகைகளை ஒட்டுவதற்கும் இது பொருத்தமானது.வழக்கமான ஒட்டு வேலைகளுக்கு 15 முதல் 20 மி.மீ கனத்திலான ஒட்டுப்பரப்பு தேவைப்படும். ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை ஒரு மி.மீ கனத்திற்குப் பரப்பினாலே போதும். உறுதி ஒட்டு உறுதி.

எப்படிப் பயன்படுத்துவது?

ஜெட்ரிவால் ஒட்டுப்பசையை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மாற்றிச் செய்து விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது.கடைகளில் வாங்கி வரும் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைத் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். தண்ணீரை இதனுடன் சேர்க்கும் வேலையைத் தவிர்க்க வேண்டியது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இப்படிச் சேர்த்துக் கொண்டே வரும் போது ஓரளவு திடமான பசை வரும் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.தண்ணீரில் ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைக் கலந்த பிறகு சுமார் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருங்கள். அவ்வாறு வைத்திருந்த பிறகே பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான  கொலுத்துக் கரண்டிகளைப் பயன்படுத்தலாம். கலவையைத் தேவைப்படும் இடத்தில் பரப்பிய பின் பொழியப்பட்ட கரண்டியைக் கொண்டு தேய்த்துவிட வேண்டும். இது ஜெட்ரிவால் ஒட்டுப்பசையைச் சிக்கனமாகப் பரப்ப உதவும்.  அதிகப்படி பசையைத் தேய்த்து எடுத்துக்கொண்டு வந்துவிடும்.

கலவையின் மேல் ஓடுகளை அழுத்திக்கொண்டு இலேசாகச் சுழற்றிக் கொடுக்க வேண்டும்.  ஒட்டப்படுவதற்கு முன் ஓடுகளையும், ஒட்டப்பட வேண்டிய பகுதிகளையும் நனைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஓடுகளைப் பதித்தபின் கரண்டிக் காம்பால் தட்டிக் கொடுக்கும் வேலைக்கும் தேவை இல்லை.  வழக்கமான ஒட்டு வேலைகளில் பின்பற்றப்படும் இம்மாதிரியான பல தேவைகளைத் தவிர்க்க முடியும் என்பதால் ஓடுகள் சிதைந்து வீணாவது குறையும். சிக்கனம் கிடைக்கும். நேரமும் உழைப்பும் கூலியும் மிச்சமாகும்.  வழக்கமான முறையில் ஓடு ஒட்டும் வேலைகளை மேற்கொள்வதைப் போல் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகப்படி வேலைகளை அதே நேர அளவிற்குள் முடித்துவிடலாம்.

ஒட்டும் தன்மை உறுதி மிக்கதாக இருக்கும். தண்ணீர்க் கசிவிற்கு இடமிருக்காது. ஒட்டப்படும் ஓடுகளுக்கு இடையே ஏற்படக் கூடிய இடைவெளிகளை அடைக்க ஜெட்ரிவால் ஒட்டுப்பசை எஃப்எம் என்பதைப் பயன்படுத்தலாம்.இந்த வேலையைச் செய்து முடிக்க வெள்ளை நிறப் பசையைப் பயன்படுத்த வேண்டி வரும். ஒட்டப்பட்ட ஓடுகளின் நிறத்துடன் இது மாறு
பட்டு இருக்குமே.. அழகைக் கெடுக்குமே என்றும் கவலைப்படத் தேவையில்லை.ஓட்டின் நிறத்தைப் போலவே ஒட்டுஇடைவெளிகளையும் நிறமேற்றிவிட முடியும். இதற்குப் பல வித வண்ணங்களில் ஸ்டெயினர்கள் கிடைக்கின்றன.